தேர்தல் சட்டங்களை மீறிய குற்றம் தொடர்பில் இதுவரையில் 1255 முறைப்பாடுகள் – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!
Monday, July 6th, 2020தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரையில் 1255 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வன்முறை, அரச சொத்தக்களை ஆக்கிரமித்தல், சட்டவிரோதமான முறையில் தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்தல் போன்ற பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை தேர்தல் சட்டங்களை மீறிய வேட்பாளர்கள் இருவர் உட்பட 119 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கூரிய ஆயுதத்துடன் களுத்துறை பிரதேச சபை பிரதி தலைவரை மிரட்டிய சம்பவம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Related posts:
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீண்டும் பின்பற்றுங்கள் - பொலிஸார் வேண்டுகோள்!
மக்கள் போராட்டம் என்ற போர்வையில் அரச கட்டடங்களை பலவந்தமாக ஆக்கிரமிப்போருக்கு எதிராக சட்டநடவடிக்கை – ...
இலங்கைக்கு முதலாவது சர்வதேச பயணத்தை ஆரம்பிக்கும் இந்திய கப்பல் - விசேட வரவேற்பு நிகழ்வில் ஜனாதிபதி ப...
|
|