தேர்தல் கால கூட்டுக்களால் மக்களுக்கு உருப்படியான எதுவும் கிடைக்கப்போவதில்லை – தோழர் ஸ்டாலின்!

Friday, February 21st, 2020

தமிழ் அரசியலில் ஏற்கனவே இருக்கும் கூட்டுக்களும் தற்போது புதிதாக உருவாகும் கூட்டுக்களும் தேர்தல் காலத்தில் மக்களின் வாக்குகளை அபகிரிக்கும் நோக்குடனான கூட்டுக்களாக ஐக்கியப்படுகின்றனவே தவிர மக்களின் எதிர்காலம் கருதியதான கூட்டுகள் அல்ல என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளரும் கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் இணைப்பாளருமான தோழர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நேத்திரா தொலைகாட்சியின் சதுரங்கம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து  தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்

மேலும் தமிழ் அரசியலில் முன்வைக்கப்படும் தமிழ் தேசியத்தினதும் அதனை முன்னிறித்தி தமது அரசியலை நடாத்தும் தமிழ் தேசிய வாதிகளினதும் போலித்தனம் மக்கள் மத்தியில் அம்பலமாகிக் கொண்டிருக்கிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சதுரங்கம் நிகழ்ச்சியின் முழு ஒளிப்பதிவும் பார்க்க கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்.

https://youtu.be/IrJE1p49Qhk

Related posts: