தேசிய முன்னுரிமைத் திட்டத்தின் கீழ் ஜனாதிபதியின் கையொப்பத்துடன் வெளியானது மற்றுமொரு விசேட வர்த்தமானி!

Thursday, February 24th, 2022

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் சிறைச்சாலை முகாமைத்துவம் மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய முன்னுரிமைத் திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானி அறிவித்தல் நிறுவனங்கள் மற்றும் சட்ட கட்டமைப்புகளை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: