தேசிய பாடசாலைகளில் முறைகேடு – முறையிட அதிகாரி நியமனம்!
Wednesday, January 23rd, 2019தேசிய பாடசாலைகளில் இடம்பெறும் மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகளை பொறுப்பேற்க அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளது.
அதற்கமைய பெற்றோர்கள் பணம் சேகரித்தல், சுற்றுநிருபத்திற்கு முறைகேடாக பொருட்களை பெற்றுக் கொள்ளல் மற்றும் ஏனைய நடவடிக்கைகள் தொடர்பில் குறித்த அதிகாரியிடம் முறையிட முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய பாடசாலைகள் தொடர்பிலான முறைப்பாடுகளை கே.ஜீ.சீ.மஹேஷிகா, உதவிக் கல்விப் பணிப்பாளர், தேசிய பாடசாலைகள் கிளை, கல்வியமைச்சு, இசுருபாய, பத்தரமுல்லை எனும் விலாசத்திற்கு எழுத்து மூலம் அறியப்படுத்த முடியும் என குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழுவின் காலம் நீடிப்பு
நல்லூர் திருவிழாவில் அன்னதானம், தாக சாந்தி, நேர்த்திக் கடன், வியாபாரங்களுக்குத் தடை!
2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப்பரீட்சை நேர அட்டவணை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியீடு!
|
|