தேசிய தமிழ் தின விழா யாழ்ப்பாணத்தில் – கல்வி இராஜாங்க அமைச்சர்!

Friday, September 29th, 2017

இம்முறை தேசிய தமிழ் தின விழா யாழ்.இந்து கல்லூரியில் எதிர்வரும் 14ஆம், 15ஆம் திகதிகளில் நடைபெறும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய தமிழ் தின விழா தொடர்பாக யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில் –

தேசிய தமிழ் தின விழா யாழ்.மாவட்டத்தில் உள்ள யாழ்.இந்துக் கல்லூரியில் நடைபெறவுள்ளது.இந்நிகழ்வில் தமிழ் பண்பாட்டு ஊர்வலம் மற்றும் தமிழ் பண்பாட்டு கலை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. குறிப்பாக இந்நிகழ்வில் தென்னிந்தியாவில் புகழ் பெற்ற பட்டிமன்ற நடுவர்கள் கலந்து கொள்ளும் சிறப்பு பட்டிமன்றங்களும் இடம்பெறவுள்ளது. வடமாகாணத்தில் இராணுவத்திடம் உள்ள பாடசாலைகள் தொடர்பாக முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களுக்கு தனித்தனியாகவும் கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மாவட்டங்களுக்கு ஒன்றாகவும் சந்திப்புக்களை நடத்தியுள்ளோம்.

இதனடிப்படையில் வட மாகாணத்தில் 16 பாடசாலைகள் இராணுவ கட்டுப்பாட்டில் மற்றும் இராணுவ சுற்றாடலுக்குள் இருக்கின்றது.எனவே அவை தொடர்பாக ஆராய்வதற்கு குழு ஒன்றை நியமித்திருக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்

Related posts: