தேசிய சேமிப்பு வங்கியின் 2020 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை பிரதமரிடம் கையளிப்பு!

Thursday, June 17th, 2021

தேசிய சேமிப்பு வங்கியின் 2020 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை, வங்கியின் தலைவர் திருமதி.கேஷிலா ஜயவர்தனவினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

2019 டிசம்பர் 31ஆம் திகதிக்கு 1.2 டிரில்லியன் ரூபாயாக காணப்பட்ட தேசிய சேமிப்பு வங்கியின் மொத்த சொத்து அமைப்பு 17.8 சதவீத வளர்ச்சியுடன் 2020 டிசம்பர் 31ஆம் திகதிக்கு 1.4 டிரில்லியன் ரூபாயாக காணப்படுகிறது.

அரசாங்கம் அறிமுகப்படுத்திய புதிய பொருளாதார செயல்முறையின் முன்முயற்சி காரணமாக 2020 ஆம் ஆண்டில் வரலாற்றில் இதுவரை பதிவு செய்யப்படாத மிக உயர்ந்த வரிக்கு முந்தைய மற்றும் பிந்தைய இலாபங்களை அடைவதற்கு தேசிய சேமிப்பு வங்கிக்கு முடிந்துள்ளது.

அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்ட 2020 ஆம் ஆண்டிற்கான கடன் நிவாரணத்தை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கை இதுவரை பூர்த்தி செய்துள்ளதுடன், வீடமைப்பு கடன் மற்றும் தனிநபர் கடன் வழங்குதலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக தேசிய சேமிப்பு வங்கியின் தலைவர் கேஷிலா ஜயவர்தன இதன்போது தெரிவித்துள்ளார்.

அதேநேரம் அரச சேவையில் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட கடன் திட்டமொன்றும் தேசிய சேமிப்பு வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், 6.75 சதவீத நிவாரண வட்டி அடிப்படையில் 15 ஆண்டுகளில் செலுத்தி முடிக்கும் வகையில் இத்திட்டம் செயற்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: