தேங்கி கிடக்கும் கடிதங்கள் ஒரு நாளைக்குள் விநியோகிக்கப்படும்!
Friday, June 29th, 2018அஞ்சல் சேவையாளர்கள் பல நாட்களாக மேற்கொண்ட பணிப்புறக்கணிப்பினால் தேங்கி கிடக்கும் கடிதங்களை ஒரு நாளைக்குள் விநியோகித்து முடிக்கப்படும் என ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளதாக அதன் இணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
அத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தேங்கி கிடக்கும் வெளிநாட்டுக் கடிதங்கள் மற்றும் பொருட்களை விநியோகிக்க விசேட வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல கோரிக்கைகளை முன்வைத்து அஞ்சல் சேவையாளர்கள் கடந்த 16 நாட்களாக முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு நேற்று முன்தினத்துடன் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
Related posts:
புலிகள் அமைப்பை சேர்ந்த போராளி ஒருவரின் மகளுக்கு ஈ.பி.டி.பியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் றெமீடியஸ் ...
புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கும்!
பேஸ்புக் ஊடாக ஏற்பட்டுள்ள ஆபத்து!
|
|