தெல்லிப்பளை மகாஜன கல்லூரியில் போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு செயற்றிட்டம்!

Tuesday, November 1st, 2022

யாழ்ப்பாணம், தெல்லிப்பளை மகாஜன கல்லூரியில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் பியந்த வீரசூரிய தலைமையில் நேற்று (31) காலை கல்லூரி பிரதான மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.

அதன் போது, போதைப்பொருளினால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், போதைப்பொருள் பாவனையில் இருந்து எவ்வாறு மீள்வது என்பது தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது.

அத்துடன், போதைப்பொருள் பாவனை மற்றும் வியாபாரம் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால், பொலிஸாருக்கு அறிவிக்குமாறும், பெரும்பாலான குற்றங்கள் போதைப்பொருள் பாவனையால் செய்யப்படுவதாகவும், அதனால் போதைப்பொருளுக்கு எதிராக மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிகழ்வில், மத குருமார்கள், யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் விஜித குணரட்ன, பாடசாலை அதிபர், ஆசிரியர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: