தென்னிலங்கையில் பெரும் பரபரப்பு: தீவிர பாதுகாப்பில் நாடாளுமன்றம் – வெற்றிபெறுவாரா பிரதமர் ரணில்!

Wednesday, April 4th, 2018

கூட்டு எதிரணியினரால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகக் கொண்டவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்று நடைபெறுகின்றது. குறித்த விவாதத்திற்கு 11 மணித்தியாலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இன்று முற்பகல் 10.00 மணிக்கு குறித்த விவாதம் ஆரம்பமாக உள்ளதுடன், மதிய போசன இடைவேளைக்கு அமர்வுகளை நிறுத்தாது தொடர்ச்சியாக இரவு 9.00 மணி வரையில் விவாதம் நடைபெறவுள்ளது.

இரகசிய வாக்கெடப்பு நடைபெறாது என்பதுடன் உறுப்பினர்களின் பெயர்கள் அழைக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் இணங்கியுள்ள நிலையில் ஏதேனும் ஒரு காரணத்திற்காக அமர்வுகள் இரவு 9.00 மணிக்கு முன்னதாக இடைநிறுத்தப்பட்டாலும் கூ , இரவு 9.00 மணிக்கு சபையை மீண்டும் கூட்டி வாக்கெடுப்பு நடாத்துவதற்கு கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

விவாதம் நடத்தப்படும் இன்றைய தினம் நாடாளுமன்றத்தையும் அதனை அண்டிய பகுதிகளிலும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் நாடாளுமன்றின் பொதுமக்கள் பார்வையிடும் கூடத்தில் இன்று பாடசாலை மாணவ மாணவியருக்கு அனுமதி வழங்குவதில்லை என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது குறித்து நேற்று முழுவதும் கூட்டு எதிர்க்கட்சியும் சுதந்திரக் கட்சியும் பல இடங்களில் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் அந்தப் பேச்சுவார்த்தைகள் இன்றும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அண்மையில் சீனாவிற்கு விஜயம் செய்திருந்த ஆளும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் தற்பொழுது நாடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: