தெகிவளையிலும் குண்டு வெடிப்பு சம்பவம்..!
Sunday, April 21st, 2019தெஹிவளை குண்டு வெடிப்பில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு அருகில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
அந்த பகுதியில் இருந்து பாரிய சத்தம் ஒன்று கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இக்குண்டு வெடிப்பில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஏற்பட்ட சேத விபரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்று வரும் நிலையில் இந்தத் தாக்குதலும் இடம்பெற்றுள்ளது.
இதனால் மிருகக் காட்சிசாலையை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானித்ததாகவும், தெஹிவளை- மிருகக் காட்சிசாலையின் பதில் பணிப்பாளர் தம்மிகா தெரிவித்துள்ளார்
Related posts:
பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹபொல நிதி வைப்பிலிடப்பட்டுள்ளது - உயர் கல்வி அமைச்சர்!
தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் பற்றிய தெளிவுபடுத்தும் திட்டம் ஆரம்பம்!
இலங்கைக்கு இந்தியா அனைத்து சந்தர்ப்பங்களிலும் முழுமையான உதவிகளை வழங்கும் - செந்தில் தொண்டமானிடம் இந்...
|
|