தில் இருந்தால் மோதிப் பாரு  – ஏகலைவன்!

Sunday, September 3rd, 2017

உன்னதமான தலைவனை , இறைவன் தமிழனுக்கு அளித்த ஒப்பற்ற கொடையை முழுமையாக இனங்காண தவறிய தமிழ் சமூகம் இனிவரும் காலத்தில் நிச்சயமாக பிராயச்சித்தம் தேடிக் கொள்ளும்.

தில் இருக்கும் எந்த அரசியல் கட்சியாவது தொகுதி வாரியாக நடக்கும் தேர்தலில் எதிர்த்து களம் இறங்கி டக்ளஸ் தேவானந்தாவை வெற்றி காணட்டும் பார்க்கலாம் என முகப்புத்தகம் ஒன்றில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஏகலைவன் பதிவிட்டுள்ளார்.

மேலும் அவரது பதிவில்…

ஐந்து தடவைகள் தொடர்ந்து பாராளுமன்றத்துக்கு தெரிவான ஒரே தமிழர் தலைவன்.போதைக்கு அடிமையாகாத ஒரே தலைவன் , தான் உறங்க மஞ்சம் தேடாத ஒரே தலைவன்,பொய் வாக்குறுதிகளை வழங்காத ஒரே மனிதன், தோழர்களுக்கு என்றுமே தோழன். இலஞ்சம வாங்காத ஒரே அரசியல்வாதி, இவரை பற்றி ஆயிரம் நல்ல விஷயங்களை கூறலாம் .

இவரது அரசியல் சாதனைகள் பத்தையாவது பட்டியல் போடுவோம் என்று தேட தொடங்கினால் தேட தேடக் குறையாத தேட்டம் இவன் சேவை . அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம் இவன் குணம். எங்கே தேடி எங்கே முடிப்பது தனது முதுகில் நிவாரணம் சுமந்த வள்ளல் இவன். எல்லாம் மக்களுக்காக இவன் மூச்சே மக்களின் நலன் தான்.

“மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி ” இவனது அரசியல் சுலோகம், தாரக மந்திரம் இன்று போலி தேசியவாதிகள் இந்த மந்திரத்துக்கு மண்டியிட்ட அடிமைகள். தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் இதனைவிட்டால் அரசியல் இல்லை.

இணக்க அரசியல் இவனது சாணக்கியம் . ஆனாலும் இன்றைய அரசியலில் இதன் அர்த்தம் சரணாகதி அரசியல். இவனது இணக்கம் மக்களின் தேவைக்காக ஆனால் இப்போது கூட்டமைப்பு செய்கிறது சுயலாபத்துக்காக. இவனது இணக்க அரசியல் சாணக்கியத்தின் ஒரு பத்தை பட்டியல் போடுவோம் என்று விசைப்பலகை முன்பு அமர்ந்து டக்ளஸ் தேவானந்தா என்று சொடுக்கினால் வந்து இறங்கிய நூறில் நான் சலித்து தந்தவை இவை.

அன்பான நண்பர்களே இனிவரும் காலங்களில் டக்ளஸ் தேவானந்தா என்ற இந்த தனிமனித சகாப்தத்தை வெற்றி அடைய வைப்பதுதான் எமது வெற்றிக்கான ஒரேயொரு வழியாகும்.அவரது சாதனைகள் சிலவற்றை கூறி நிறைவு செய்கிறேன்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகம், பல்கலைக்கழக கல்லூரி, யாழ்ப்பாண பல்கலைக்கழக பொறியியல் பீடம், இரணைமடு குடிநீர் திட்டம், காற்றாலை மின் உற்பத்தி திட்டம்,
யாழ்தேவி புகையிரதம் வடக்கு வீதி அபிவிருத்தி, 50000 இந்திய வீட்டு திட்டம் உட்பட பல்வேறு வீட்டு திட்டங்கள் ,விவசாயத்துக்கு 500 உழவு இயந்திரம் உட்பட பல்வேறு உதவிகள்,மீன்பிடி தொழிலுக்கு பல்வேறு உதவிகள்,அதியுயர் பாதுகாப்பு வலயம் 95% ஆன பகுதிகளை விடுவிப்பு ,13 வது திருத்தம் அகற்றப்படாமல் பாதுகாப்பு ,சமுர்த்தி நிவாரணம் .பல்வேறு ஆலயங்கள் புனரமைப்பு. வேலையற்ற பட்டதாரிகள் வேலைவாய்ப்பு.தொண்டர்கள் வேலைவாய்ப்பு.13000 போராளிகள் விடுவிப்பு.முகாம் மக்கள் விடுதலை,கர்ப்பிணி பெண்கள் விடுவிப்பு,வயோதிபர்கள் விடுவிப்பு, யுத்த கால நிவாரணம் வழங்குதல் ,10000 துவிச்சக்கரவண்டிகள் வழங்குதல். வடக்கு கல்வி முதலிடம் .

இப்படி எத்தனை எத்தனையோ சேவைகள் எண்ணி எண்ணி மாளாது.நீங்கள் ஒரு அவசர தேவைக்காக நள்ளிரவு 12.00 மணிக்கு கூட உதவி கேட்டு போகக்கூடிய ஒரே மனிதன் , ஒரே தோழன் , ஒரேயொரு ஜீவன் டக்ளஸ் தேவானந்தா என்ற ஒரேயொரு தலைவன் தான் என்று அடித்து கூறுவேன் எவ்விதமான தயக்கமும் இன்றி.

நன்றி .

ஏகலைவன்.

யாழ்ப்பாணம்,

Related posts: