திருமலை மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் தமக்கு நீதி பெற்றுத்தரக் கோரி ஈ.பி.டி.பியிடம் மகஜர் கையளிப்பு!
Sunday, March 5th, 2017
தமக்கான நியமனங்களை பெற்றுத்தருவதற்கான முயற்சியனை மேற்கொண்டு தருமாறுகோரி திருகோணமலை மாவட்ட வேலையில்லாப் பட்டதாரிகள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.
கடந்த மூன்று நாட்களாக திருகோணமலை ஆளுனர் அலுவலகத்திற்கு முன்பாக தொடர் போராட்டங்களை மேற்கொண்டுவரும் வேலையில்லாப் பட்டதாரிகளை சந்தித்து அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்துகொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் திருகோணமலை மாவட்டப் பிரதிநிதி புஸ்பராசா அவர்களிடமே குறித்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த மகஜரில் பட்டதாரிகளின் திறமைகளை ஒரு குறிப்பிட்ட போட்டிப்பரீட்சை மூலம் அறிந்துகொள்ள முடியாது என்றும் நேர்முகப் பரீட்சைகள் மூலம் வழங்கப்படும் பட்டதாரி நியமனங்களை பயிற்சி அடிப்படையிலேயே வழங்கப்படவேண்டும் என்றும், அதற்குரிய நிதியை நிதியைமச்சு ஒதுக்கவேண்டும் உள்ளிட்ட ஏழு கோரிக்கைகள் உள்ளடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|