திருமலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சுய தனிமைப்படுத்தலில் – மாவட்ட அரசாங்க அதிபர்!
Thursday, April 9th, 2020திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்பான தனிமைப்படுத்தல் செயற்பாடு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ் கிரமமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் அசங்க அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதுவரை வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த 744 பேரும் உள்நாட்டில் பிற மாவட்டங்களில் இருந்து வருகை தந்த 1452 பேரும் சுய தனிமைப்படுத்தல் செயற்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர்களுள் வெளிநாடுகளில் இருந்து வந்த 676 பேரினதும் உள்நாட்டில் இருந்து வந்த 656 பேரினதும் சுய தனிமைப்படுத்தல் செயற்பாடு பூர்த்தி அடைந்துள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் 10 சந்தேகத்திற்கிடமான நபர்கள் அடையாளம் காணப்பட்டு உரிய மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் அவர்கள் அனைவருக்கும் குறித்த தொற்று காணப்படவில்லை என்று ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை மாவட்டம் இற்றைவரை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பாக உள்ளதாகவும் தொடராக இதனைப்பேண அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் மாவட்ட அரசாங்க அதிபர்வேண்டிக்கொண்டார்.
Related posts:
சேதங்களை மதிப்பீடு செய்வதில் சிரமம் - நிதி அமைச்சு!
முறைப்பாடு கிடைப்பின் கைதுசெய்ய அரசாங்கம் தயங்காது!
பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் - இலங்கை செஞ்சிலுவை சங்க!
|
|