திருப்தியின்றி முடிவடைந்த யாழ்.பல்கலைக்கழ மாணவர்கள் -ஜனாதிபதி சந்திப்பு!

Wednesday, November 2nd, 2016
பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரினால் சுட்டுப் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தமக்கு திருப்தி அளிக்கவில்லை என யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்

எனினும் இந்த சந்திப்பில் ஜனாதிபதியினால் அளிக்கப்பட்ட உறுதிமொழிகளை தாங்கள் யாழ்ப்பாணத்திற்கு சென்றதும் சக மாணவர்களுக்கு அறிவித்து அவர்கள் ஏற்றுக்கொண்டால், மீண்டும் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என்று கூறிய யாழ் பல்கலைக்கழக கலைபீட மாணவர் ஒன்றியத் தலைவர் எஸ்.ரஜீவன், மாணவர்கள் நிராகரித்தால் வகுப்புப் பகிஷ்கரிப்பு தொடரும் என்றும் தெரிவித்தார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கடந்த 21 ஆம் திகதி பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நீதி வேண்டி யாழ் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள் தொடர்ச்சியாக வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் மாணவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் இன்று கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் – மாணவர்களுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இதில் யாழ் பல்கலைக்கழக துணை வேந்தர் வசந்தி அரசரத்தினமும் யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கே. ரஜீபன் தலைமையில் 16 பேர் கொண்ட மாணவர் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனும் கலந்துகொண்டிருந்த இந்தக் கலந்துரையாடலில் மாணவர்களால் முன்வைக்கப்பட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுவதுடன் மீண்டும் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெறாது என்றும் உறுதியளித்துள்ளார்.

எனினும் சந்திப்பு முடிந்து வெளியில் வந்த யாழ் பல்கலைக்கழ மாணவர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற இன்றைய சந்திப்பு தொடர்பில் தமக்கு திருப்தியில்லை என தெரிவித்தனர்.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கே. ரஜீபன் இன்றைய சந்திப்பில் 100 வீதம் நம்பிக்கை இல்லை. ஆனால் மாணவர்கள் 10 ஆயிரம் பேர் முன்னிலையில் தெரிவிக்கப்பட்ட உறுதிமொழிகளை கூறுவோம். மாணவர்கள் ஏற்றுக்கொண்டால் கல்வி நடவடிக்கையில் ஈடுபடுவோம். இல்லாவிட்டால் போராட்டம் தொடரும் என்றார்.

மாணவர்கள் மீதான துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பான முழுமையான விளக்கமொன்றை ஜனாதிபதி வழங்க வேண்டும்கைது செய்யப்பட்டுள்ள ஐந்து சந்தேக நபர்களில் குற்றவாளியை இனங்கண்டு விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்

இது தொடர்பிலான வழக்கு விசாரணைகளை தாமதப்படுத்தக்கூடாது.படுகொலை செய்யப்பட்ட இரண்டு மாணவர்களுக்காக அவர்களது பெற்றோருக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய நட்டஈட்டை அரசாங்கம் விரைவில் வழங்கிவைக்க வேண்டும்தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மாணவர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்கும் இவ்வாறான சம்பவமொன்று இனியும் இடம்பெறக்கூடாது என்ற உறுதியை ஜனாதிபதி வழங்க வேண்டும்.என்பதே மாணவர்களின் ஐந்து அம்ச கோரிக்கைகள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Untitled-1 copy

Related posts: