திருநெல்வேலி – பாரதிபுரம் தொடர்ந்தும் அபாயத்தில்!

Wednesday, April 21st, 2021

கொரோனா அச்சுறுத்தலை அடுத்து முடக்கப்பட்டிருக்கும் திருநெல்வேலி – பாரதிபுரம் கிராமத்தில் மேலும் 5 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இறுதியாக 643 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தில் 7 பேர் உட்பட வடமாகாணத்தில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதன்படி யாழ்.மாவட்டத்தில்  திருநெல்வேலி  – பாரதிபுரம் கிராமத்தில் 5 பேருக்கும்,  சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

மேலும் வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களை சேர்ந்தவர்கள் எனவும் பணிப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: