திடீரென தீப்பற்றி எரிந்த மகிழுந்து : யாழில் பதற்றம்!
Friday, August 17th, 2018
ஆனைக்கோட்டை – அரசடி பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த மகிழுந்து நேற்றிரவு 8 மணியளவில் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது.
குறித்த சம்பவத்தின் போது மகிழுந்தில் மின் ஒழுக்கு ஏற்பட்டு புகை வெளியேறியுள்ளது. உடனடியாக மகிழுந்தில் பயணித்தவர்கள் இறங்கியுள்ள நிலையில், மகிழுந்து திடீரென தீ பிடித்து எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து யாழ்.மாநகரசபை தீயணைப்பு பிரிவுக்கு மக்கள் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இருப்பினும் மகிழுந்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Related posts:
குத்தகைக்கு பெற்ற A-330 விமானத்தை இலங்கையிடம் மீளவும் ஒப்படைப்பதற்கு பாகிஸ்தான் தீர்மானம்!
பொதுமக்களிடம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் முக்கிய வேண்டுகோள்!
யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றை இல்லாதொழிக்க அனைவரும் ஒன்றிணைவோம் - யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் த...
|
|
|


