தாராள சிந்தனை கொண்ட ஜனாதிபதியின் கீழ் ஆளுநராக செயற்படுவதில் மகிழ்ச்சியாக உள்ளது – வடக்கின் புதிய ஆளுநர் சார்ல்ஸ் தெரிவிப்பு!

Wednesday, May 17th, 2023


………
தாராள சிந்தனை கொண்ட ஜனாதிபதியின் கீழ் ஆளுநராக செயற்படுவதில் மகிழ்ச்சி அடைவதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

பதவிப்பிரமாணத்தின் பின் செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போது அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மக்களுக்கு தேவையானவற்றை வழங்குவதற்கு தன்னுடைய முழுமையான ஒத்துழைப்பை தருவதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க எங்களிடம் உறுதி அளித்திருக்கின்றார்.

தாராள சிந்தனை கொாண்ட ஒரு ஜனாதிபதியின் கீழே வடமாகாணத்திலே ஆளுநராக பதவியேற்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்துள்ளமை குறிப்பிகுறிப்பிட்டுள்ளது

Related posts: