தற்போதைய நிலையில் தேர்தல் தொடர்பில் எதுவும் கூற முடியாது – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்!
Sunday, April 12th, 2020பொதுத் தேர்தல் நடைபெறும் தினம் பற்றி தற்போதைக்கு எதுவும் கூற முடியாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார் என சிங்கள வார இறுதி பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பொதுத்தேர்தல் நடத்துவது குறித்து ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தரவினால் கடந்த 6ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் தமக்கு கிடைக்கப் பெற்றமை குறித்து கேள்வி எழுப்பிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது..
அத்துடன் நாடு சாதாரண நிலைமையை அடையும் வரையில் பொதுத் தேர்தல் நடத்துவது குறித்து திடமான தினம் எதனையும் குறிப்பிட முடியாது எனவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
அமரர் அருணாசலம் சந்திரசேகரத்தின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி இறுதி அஞ்சலி!
பஹ்ரைனுடனான பொருளாதார உறவை மேம்படுத்துவது குறித்து பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் கலந்...
ஜனாதிபதி தலையீடு – வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு விமான நிலையத்திலேயே பிசிஆர் பரிசோதனை – ஒரு சில ...
|
|