தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பிக்கும் கால எல்லை நாளையுடன் நிறைவு!
Sunday, August 30th, 2020கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை நாளை 31 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
முன்பதாக பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான www.doenets.lk ஊடாக மாணவர்கள் தமது விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் பாடசாலை பரீட்சார்த்திகள் அதிபர் ஊடாகவும் தனியார் பரீட்சார்த்திகள் பரீட்சைகள் திணைக்களத்தின் ஆலோசனைக்கமையவும் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்
விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை ஆகஸ்ட் 21 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்த நிலையில், குறித்த கால எல்லையை ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்படமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
2500 தண்டம் குறைந்தபட்ச வீதி ஒழுங்குகளை மீறுபவர்களுக்காக அல்ல – நிதி அமைச்சர்!
முடிவுக்கு வந்தது பட்டதாரிகள் போராட்டம்!
அருகிலுள்ள பாடசாலைகளில் ஆசிரியர்களுக்கு நியமனங்களை வழங்க கல்வி அமைச்சு இணக்கம்!
|
|