தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகள் அனைத்துக்கும் ஒக்டோபர் 11 ஆம் திகதி நள்ளிரவுமுதல் தடை – பரீட்சை திணைக்களம் அறிவிப்பு!
Wednesday, October 4th, 2023தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான விரிவுரைகள், கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புகள் மற்றும் செயலமர்வுகள் எதிர்வரும் ஒக்டோபர் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த தடையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் 15ஆம் திகதி சுமார் 2,888 நிலையங்களில் நடைபெறவுள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சையின் இரண்டாம் பாகம் காலை 9.30 மணி முதல் 10.45 மணி வரையும், முதல் பாகம் 11.15 மணி முதல் மதியம் 12.15 மணி வரையும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
யாழில் 17 வயதுச் சிறுமிக்கு முதியவர் செய்த கொடூரம்!
தவறிழைக்கும் நாணயமாற்றுநர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் ஆரம்பம் - இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!
அரசியலமைப்பின் 44/3 சரத்தை உறுதிசெய்ய ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் இணக்கப்பாடு!
|
|