தரம் 01 மாணவர் சேர்க்கை பாடசாலைகளால் மாத்திரமே மேற்கொள்ளப்படும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!
Tuesday, December 13th, 2022
தரம் 01 மற்றும் க.பொ.த உயர்தர மாணவர்களை பாடசாலைகளில் சேர்ப்பது தொடர்பான புதிய விதிமுறைகளை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
தரம் 01 மாணவர்களை உள்வாங்குவது பாடசாலைகளால் மாத்திரமே மேற்கொள்ளப்படும் எனவும் கல்வி அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்படாது எனவும் அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
மேலும் 2022 க.பொ.த சாதாரண தர மாணவர்கள் விரும்பிய க.பொ.த உயர்தரப் பாடங்களை உள்ளடக்கிய பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சுக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது, ஏனெனில் இந்த செயல்முறை பாடசாலைகளால் மட்டுமே மேற்கொள்ளப்படும்.
2023 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை 2022 ஆம் ஆண்டு மூன்றாம் கல்விப் பருவம் முடிந்த பிறகே தொடங்கும், அதாவது மார்ச் 24, 2023 அன்று தொடங்கும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஜனாதிபதியின் உத்தரவுக்கு எதிரான மனுவை விசாரிக்க அதிகாரமில்லை - சட்டமா அதிபர்!
காரைநகரில் ஒருவருக்கு கொரோனா தொற்று – இழுத்து மூடப்பட்டன சங்கானை சாராயக்கடையும் மீன் சந்தையும் - 40 ...
ரெட் விங்ஸ் விமானம் மத்தளவுக்கு சேவைகளை ஆரம்பித்தது - முதல் விமானம் தரையிறங்கியது!
|
|
|


