தனியார் கல்வி நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு – யாழ் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம்.!

Wednesday, May 31st, 2023

சனி ஞாயிறு தினங்களில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தனியார் கல்வி நிலையங்களுக்கு  அருகாமையில் பொலிசாரின்  பிரசனத்தை அதிகரிப்பதற்கு யாழ்  மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் சனி ஞாயிறு ஆகிய தினங்களில் தனியார் வகுப்புகள் இடம் பெறும் இடங்களுக்கு அண்மையில் பொலிசாரின் ரோந்து நடவடிக்கைகள் மற்றும்  பாதுகாப்பு கடமையில்  ஈடுபடுத்துமாறு ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இன்றையதினம் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு  கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதோடு குறித்த விடையத்தினை தொடர்ந்து செயற்படுத்துவதாக  யாழ்  மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரால்   உறுதியளிக்கப்பட்டது

கடந்த வாரம்முதல் தனியார் வகுப்பு நிலையங்களுக்கு அருகில் பொலிசாரின் ரோந்து நடவடிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதோடு பாதுகாப்பு நடவடிக்கையும்  முன்னெடுக்கப் படுவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: