தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 71 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது பொலிஸ் ஊடகப் பிரிவு தகவல்!

Tuesday, September 14th, 2021

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் கீழ் கடந்த 24 மணி நேரத்தில் 773 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின அடிப்படையில் இதுவரை 71 ஆயிரத்து 467 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில் கடந்த 24 மணிநேரத்தில் 124 வாகனங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: