தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய மேலும் 739 பேர் கைது – பொலிசார் தகவல்!
Saturday, September 4th, 2021தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டிலேயே கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 739 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் 70 வாகனங்கள் கைப் பற்றப்பட்டுள்ளனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதிமுதல் இதுவரை 64 ஆயிரத்து 647 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மேல் மாகாணத்தில் உள் நுழையும் மற்றும் வெளியேறும் பகுதிகளில் நேற்று ஆயிரத்து 335 வாகனங்களில் பயணித்த ஆயிரத்து 959 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
ஊரடங்குச் சட்டம் தளர்வை அடுத்து நாடுமுழுவதும் 4700 பஸ்கள் போக்குவரத்து சேவையில் - பொது போக்குவரத்து ...
எதிர்வரும் திங்களன்று மேல் மாகாணம் தொடர்பில் இறுதி முடிவெடுக்கப்படும் - சுகாதார சேவைகளின் பணிப்பாளர...
தடுப்பூசிகள் விற்கப்படுவதாக வெளியான தகவல் குறித்து விசாரணை!
|
|