தனிமைப்படுத்தப்பட்ட விதிகள் மீறப்படுவதை கண்காணிக்க சிவில் உடையில் பொலிஸார் எந்த நேரத்திலும் நிறுவனங்களுக்குள் உள்நுழைவர் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எச்சரிக்கை!

Friday, November 20th, 2020

தனிமைப்படுத்தப்பட்ட விதிகள் மீறப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க சிவில் உடையில் பொலிஸ் அதிகாரிகள் பொதுச் சேவை நிறுவனங்களுக்குள் உள்நுழைவார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண எச்சரித்துள்ளார்.

பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சுகாதார அதிகாரிகளின் அனுசரணையில் பொதுச்சேவை வழங்குநர்களின் வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட விதிகள் பின்பற்றப்படுகிறதா என்பதைச் சரிபார்க்க சிவில் பொலிஸ் அதிகாரி களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

விசேடமாக கடந்த ஒக்டோபர் 28 ஆம் திகதிமுதல் வர்த்தமானி அறிவித்தலின் படி நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் மூன்று முக்கியமான விடயங்களைக் கருத்திற் கொண்டு செயற்படவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த நிறுவனங்களுக்கு உள் நுழைந்த உடன் கைகழுவுதல், வெப்பநிலையை பரிசோதித்து பார்த்தல், அலுவலகங்களுக்கு உள்நுழைவதற்கு முதல் புத்தகத்தில் குறித்த நபர்களின் விடங்களைக் குறிப்பிட வேண்டும் மற்றும் எந்த நேரமும் சமூக தூர இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். இது போன்ற செயற்பாடுகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப் படுகின்றதாக என்பதைக் கண்காணிக்க பொலிஸார் சிவில் ஆடையில் உள்நுழைவார்கள்.

இதனால் நீங்கள் இலங்கையில் எந்த பிரதேசங்களிலிருந்தாலும் தொடர்ந்தும் மேலே கூறிய சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டும். அதன்படி, நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் ஏனைய தொழில் வழங்கும் நிறுவனங்களிடம் இந்த சுகா தார வழிகாட்டல்களைத் தொடர்ந்தும் பின்பற்றுமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: