தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகள் வழமைக்கு கொண்டுவரப்படும் – பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகன தெரிவிப்பு!

Sunday, November 15th, 2020

மேல் மாகாணத்தில் வெளியே செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை இன்று நள்ளிரவு முதல் நீக்கபடுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகன தெரிவித்துள்ளார்.

அத்துடன் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகள் வழமைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மத்திய கொழும்பு பகுதியில் மேலும் ஐந்து பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக கொவிட் 19 தொற்றைக் கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி, தற்போது கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 12 பிரதேசங்களுக்கு மேலதிகமாக மருதானை, புறக்கோட்டை, கோட்டை, கொம்பனித்தெரு, டேம் ஸ்ட்ரீட் ஆகிய பொலிஸ் பிரிவுகள் நாளை காலை ஐந்து மணி முதல் தனிமைப்படுத்தப்படும். கம்பஹா மாவட்டத்தில் நீர்கொழும்பு, ஜா-எல, ராகம, கடவத்தை, வத்தளை, பேலியகொட ஆகிய பொலிஸ் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் விடுவிக்கப்படவுள்ளன. களனி பொலிஸ் பிரிவு நாளை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: