தனித்து விடப்பட்ட தீவக மக்களின் காப்பரணாக வந்தவர் யார்? – ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் கேள்வி!

Monday, February 6th, 2017

90 களின் ஆரம்பத்தில் கேந்திர முக்கியத்துவம் இல்லாத பகுதியென தனித்து விடப்பட்டிருந்த தீவக மக்களின் நம்பிக்கை ஒளியாகவும் காப்பரணாகவும் வந்து நின்று அடிப்படைத் தேவைகள் தொடக்கம் பாதுகாப்புவரையான அனைத்தையும் வழங்கி இப்பகுதி மக்களுக்கு நிம்மதியான வாழ்வியல் சூழ்நிலையை உருவாக்கிக்கொடுத்தவர்கள் யார் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்றையதினம் அல்லைப்பிட்டி பகுதியில் நடைபெற்ற மக்கள் குறைகேள் நிகழ்வில் கலந்துகொண்டு அப்பிரதேச மக்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்தறிந்த பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மக்களது வறுமையையும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் தீரா பிரச்சினைகளாக்கி அவ்வாறான நிலைமைகளிலிருந்து தமிழ் மக்கள் மீட்சி பெறக்கூடாது என சபித்துக் கொண்டிருக்கும் சாத்தான்களாகவே உங்களது வாக்குகளை சிலர் அபகரித்து அரசியல் வியாபாரம் செய்கின்றனர்.

16523185_1314142901958127_1625903879_o

ஆனாலும் 1990 ஆம் அண்டுகளின் ஆரம்பத்திலிருந்து இந்த மண்ணில் கால் பதித்த போது  உங்கள் பசியைப் போக்க முதுகிலே உணவு மூட்டைகளை சுமந்து வந்தவர் எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்.

கேந்திர முக்கியத்துவம் இல்லாத பகுதி என்று நீங்கள் எல்லலோராலும் கைவிடப்பட்டிருந்த நிலையில் வேறெந்த தலைவர் இங்கு உங்கள் அவலங்களைப் போக்குவதற்கு வந்து நின்றார்?

பனிறிக்கு முன்னால் முத்தை போட்டதுபோல் இன்று தமிழ் மக்களது அரசியல் அதிகாரங்கள் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான ஆற்றலும் அக்கறையும் இல்லாதவர்கள் முன்பாக  சிதைந்து கிடக்கின்றன.

16650978_1314142961958121_1149186193_o

ஆனால் நீங்கள் எமக்கு வழங்கிய குறிப்பிட்ட அரசியல் அதிகாரங்களை கொண்டு நாம் முன்னெடுத்தவரும் மதிநுட்ப சிந்தனைகளூடாக எமது சக்திக்கப்பாற்பட்ட எல்லைவரை சென்று பெரும்பணிகளை எல்லாம் எமது மக்களுக்கு செய்திருக்கின்றோம். இன்றும் அவற்றை மேற்கொண்டும் வருகின்றோம்.

எமது பணிகள் அனைத்தமே மக்களை நோக்கியதாகவே இருந்தவருகின்றது.  எமது மக்கள் எமது சொந்த மண்ணில் சுதந்திர மனிதர்களாக அனைத்தையும் பெற்று அமைதி நிறைந்த வாழ்வை வாழவேண்டும் என்பதற்கான சூழ்நிலைகளை உருவாக்கி கொடுப்பதற்காகவே எமது பயணத்தை இடையறாது மேற்கொண்டுவருகின்றோம்.

காலம் ஒரு மாற்றத்தை வேண்டி நிற்கின்றது. அந்த மாற்றத்தினூடான தமிழ் மக்களது அரசியல் அதிகாரம் எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கரங்களுக்கு வழங்கப்படுமானால் நிச்சயம் நீங்கள் காணும் கனவுகளும் ஒருநாள் நிறைவேறும். ஆகவே நீங்கள் மாற்றத்தை நோக்கி விழிப்படைந்து வரவேண்டும் என்றார்.

இந்த சந்திப்பின்போது கட்சியின்  தேசிய அமைப்பாளர் பசுபதி  சீவரத்தினம் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கெ.ஜெகன்) வெலணை பிரதேச உதவி நிர்வாக செயலாளர் ஞானமூர்த்தி ஆகியோருடன் பொது மக்கள் பலரும் கலந்தகொண்டனர்.

Related posts: