தடைசெய்யப்பட்ட பொலித்தீன் பாவனை தொடர்பில் 9000 முறைப்பாடுகள்!
Thursday, December 27th, 2018நடப்பாண்டின் இதுவரையான காலப்பகுதியில் தடைசெய்யப்பட்ட பொலித்தீன் பாவனை தொடர்பில் 9000 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் விசாரணைப்பிரிவு பணிப்பாளர் என்.எஸ். கமகே தெரிவித்துள்ளார்.
தடைசெய்யப்பட்டுள்ள பொலித்தீன் தயாரிப்புகள் மற்றும் அதனைப் பயன்படுத்துபவர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குவதற்காக, 0718 188 654 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு முறைப்பாடுகளை முன்வைக்கலாம் என குறித்த விசாரணைப்பிரிவு பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பொலிஸார் மற்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபையினர் இணைந்து சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
அரச தொழில் முயற்சிகளில் தகுதியும் ஆற்றலும் உள்ளவர்கள் நியமனம் : நிதியமைச்சர்!
செல்வச் சந்நிதியானுக்கு நாளை கொடி!
யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் நான்கு முக்கிய நகரங்களில் காற்று மாசுபாட்டின் விகிதத்தில் அதிகரிப்பு!
|
|