தடைசெய்யப்பட்ட பொலித்தீன் பாவனை தொடர்பில் 9000 முறைப்பாடுகள்!

நடப்பாண்டின் இதுவரையான காலப்பகுதியில் தடைசெய்யப்பட்ட பொலித்தீன் பாவனை தொடர்பில் 9000 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் விசாரணைப்பிரிவு பணிப்பாளர் என்.எஸ். கமகே தெரிவித்துள்ளார்.
தடைசெய்யப்பட்டுள்ள பொலித்தீன் தயாரிப்புகள் மற்றும் அதனைப் பயன்படுத்துபவர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குவதற்காக, 0718 188 654 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு முறைப்பாடுகளை முன்வைக்கலாம் என குறித்த விசாரணைப்பிரிவு பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பொலிஸார் மற்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபையினர் இணைந்து சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
சனசமூக நிலையங்களுக்கான இவ்வருட ஒதுக்கீட்டு நிதி வேலணை பிரதேச தவிசாளர் கருணாகரகுருமூர்த்தியால் வழங்கி...
விலை அதிகரிப்பு: தரம் குறைந்த பொருட்கள் சந்தையில் – எச்சரிக்கும் இலங்கை பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்...
நாளையதினம் நாடு முழுவதும் "கிராமத்துடனான உரையாடல் - வரவு செலவுத் திட்டத்திலிருந்து ஒரு இலட்சம்...
|
|