தடுப்பூசி திட்டத்தின் வெற்றியினால் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாகக் குறைவு – விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம சுட்டிக்காட்டு!
Monday, September 20th, 2021
தற்சமயம் கொரோனா தொற்றாளர்கள் உயிரிழப்புக்களில் தெளிவான குறைவைக் காணக்கூடியதாக இருப்பதாக விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ‘பயணக்கட்டுப்பாடு’ மற்றும் ‘தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம்’ காரணமாகவே இது சாத்தியப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
‘கொரோனா தொற்றாளர்களாக’ இனங்காணப்படுவோர் மற்றும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்துள்ளது.
தடுப்பூசியேற்றும் நடவடிக்கை இதற்கான காரணமாகும் என்றும் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பெரிய வெங்காயத்துக்கான தீர்வை அதிகரிப்பு!
தொண்டமானாறு கலைவாணி சனசமூக நிலையத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியால் தளபாடங்கள் வழங்கிவைப்பு!
நாட்டை கட்டியெழுப்ப ஆராய்ச்சித் துறைகளின் ஒத்துழைப்பு தேவை!
|
|
|


