தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கான தொழில்நுட்ப நடவடிக்கைகள் முன்னெடுப்பு : சுகாதார அமைச்சர் அறிவிப்பு!

Wednesday, January 5th, 2022

பொது இடங்களில் கொவிட் -19 தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கான தொழில்நுட்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் QR குறியீடு மற்றும் விண்ணப்பத்தை வழங்குவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசிகளை கட்டாயமாக்க முடியாத நிலையில், பொது இடங்களுக்குப் பிரவேசிக்கும் போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்க முடியும் எனவும் அதற்கான ஏற்பாடுகள் அமுல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்..

பொதுச் சுகாதார பரிசோதகர்களுடனான கலந்துரை யாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts: