”டெல்டா பிளஸ்” திரிபு வைரஸ் குறித்தும் அச்சப்படுகிறோம் – மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!

Wednesday, August 11th, 2021

நாடு முழுவதும் உடனடியாக முடக்கப்பட்டாலும் அடுத்த 10 நாட்களில் உருவாகப்போகும் பாதிப்புக்களை தவிர்க்க முடியாதென தெரிவித்துள்ள வைத்திய நிபுணர்கள், நாட்டின் ஒட்டுமொத்த மருத்துவத்துறையும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளனர்.

டெல்டா மாறுபாடு எந்த மாகாணங்களில் பரவியது என்பதை அடையாளம் காண வைத்தியர்கள் தற்போது வரிசைப்படுத்தலை அதிகரித்துள்ளனர் என்பதோடு, டெல்டா பிளஸ் குறித்த ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

டெல்டா மாறுபாடு மிகவும் அதிகமாக இருக்கும்போது டெல்டா மாறுபாடு இயற்கையாக உருமாறும்போது டெல்டா பிளஸாக மாற்றமடையுமென தெரிவித்துள்ள அவர்கள், இலங்கையில் இது இன்னும் கண்டறியப்படவில்லை என்றாலும், மருத்துவர்கள் விழிப்புடன் நிலைமையை கண்காணித்து வருகின்றனர் என தெரிவித்துள்ளனர்.

தற்போது டெல்டா மாறுபாடு தான் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பை ஏற்படுத்தியிருப்பதாக மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.

அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்களின் அடிப்படையில் நாள் ஒன்றிற்கு 2 ஆயிரத்து 500 முதல் 2 ஆயிரத்து 800 நோயாளிகள் என மதிப்பிடப்பட்டாலும், அந்த எண்ணிக்கை 4 ஆயிரத்தை கூட இருக்கலாம் என்றும் அவர்கள்  எச்சரித்துள்ளனர்..

அத்துடன் தற்போது பதிவாகியிருப்பது சுமார் 8 முதல் 10 நாட்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை மாத்திரமே என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: