டெங்கு பரவும் வகையில் சூழல் இருந்தால் நடவடிக்கை!

Wednesday, July 12th, 2017

டெங்கு பரவும் வகையில் சூழலை வைத்திருக்கும் நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளின் பிரதானிகளுக்கு தண்டனை விதிக்கும் வகையிலான சட்டத்தை தயாரிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, அமைச்சர் பைசர் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள சட்டத்திற்கு அமைய சிறிய ஊழியர்களுக்கு மட்டுமே இது தொடர்பில் தண்டனை விதிக்கப்படுகின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.  உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சில், பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவூட்டும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே பைசர் முஸ்தபா மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

Related posts: