டெங்கு நோயைக் கட்டுப்படுத்த சுகாதாரப்பிரிவினர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்! 

Wednesday, February 14th, 2018

வடமாகணத்தில் தொடர்ந்தும் சுகாதாரப்பிரிவினர் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

டெங்கு நோயின் தாக்கம் குறைந்த முதல் மூன்று  மாவட்டங்களாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு புத்துயிர் பெற்றுவரும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகியன சுகாதாரப் பிரிவினரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதற்குக் காரணம் சுகாதாரப்பிரிவினரால் முன்னெடுக்கப்படும் டெங்கு கட்டுப்பாட்டு வாரம், டெங்கு  ஒழிப்பு செயற்திட்டம் போன்ற பல நடவடிக்கைகளே என பொதுமக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts: