டெங்கு தொற்று – அபாய வலயமாக மாறியது யாழ். மாவட்டம் – அரச அதிபர் மகேசன் எச்சரிக்கை!

டெங்கு காய்ச்சலுக்ககான புள்ளி விபரத்தின் படி யாழ். மாவட்டம் டெங்கு அபாய வலயமாக காணப்படுகின்றது என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் எச்சரித்துள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர் –
யாழ். மாவட்டத்தைப் பொறுத்தவரையில் சமகாலத்தில் டெங்கு காய்ச்சல் அதிகமாகவே காணப்படுகின்றது.
எனவே பொதுசுகாதார பரிசோதகர்கள், கிராம உத்தியோகத்தர்கள், ஏனையோருடன் இணைந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஒன்றிணைந்து செயற்படுமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்.
எமது மாவட்டத்தில் மலோரியா அபாயம் இருந்தபோதும் தற்போது அது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்தவகையில் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அனைத்து நிர்மாணப் பணிகளும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் மேற்பார்வையில் துரிதப்படுத்தப்பட...
இந்திய அரசின் நிதியுதவியில் வடக்கு கடற்றொழிலாளர்களுக்கு மனிதாபிமான உதவிப் பொருட்கள் வழங்கிவைப்பு!
தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பில் நாடாளுமன்ற ஒன்றியக் கூட்டத்தில் ஆராய்வு!
|
|
பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட கட்டடங்களை புதுப்பித்து மீள் குத்தகைக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவேண...
முடக்க நிலையிலிருந்து எதிர்வரும் 11 ஆம் திகதி திறக்கப்படுகிறது இலங்கை - சுகாதார வசதிகளை உரியமுறையில...
பொருளாதார நெருக்கடிக்கு அரசியல் தீர்வு கிடையாது - பொருளாதார ரீதியான தீர்வே அவசியம் - ஜனாதிபதி ரணில்...