டிசம்பர் 15ஆம் திகதிக்கு முன்னர் உரத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள் – விவசாய அமைச்சு அறிவிப்பு!
Friday, December 1st, 2023சிறுபோகத்தில் யூரியா உரத்திற்காக வழங்கப்பட்ட வவுச்சர்களுக்கு உரத்தை பெற்றுக் கொள்ளாத விவசாயிகளை, எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் உரத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு விவசாய அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்காக அரசாங்கம் விவசாயிகளுக்கு வவுச்சர்கள் வழங்கியுள்ளதாகவும் அந்த வவுச்சரை கொண்டு உரத்தை பெற்றுக் கொள்ளாதவர்கள் இருப்பதாகவும் கமநல அபிவிருத்தி திணைக்களம் விவசாய அமைச்சுக்கு அறியப்படுத்தியுள்ளது.
இதற்கமைய, சிறுபோகத்தில் பயன்படுத்தப்படாத வவுச்சர்களை பெருபோகத்தின் போது பயன்படுத்துவதற்கு அனுமதிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
கடன் அட்டை பாவனையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் செய்தி!
மக்களின் தேவைகளை நிறைவேற்றும்போது அரச கொள்கையின் பிரகாரமும் செயற்பட வேண்டியது அவசியம் – துறைசார் அதி...
பிரான்ஸின் உயரிய விருதைப் பெற்றார் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி!
|
|