டக்ளஸ் தேவானந்தாவுக்கு நீண்ட ஆயுள் வேண்டி திருமலையில் விசேட பூசை வழிபாடுகள்!
Thursday, November 10th, 2016
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினரமாகிய டக்ளஸ் தேவானந்தாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு திருகோணமலை சம்பூர் ஸ்ரீ பதிதிரகாளி அம்பாள் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஆதரவாளர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விசேட வழிபாட்டு நிகழ்வுகள் இன்றையதினம (10) காலை நடைபெற்றது. வழிபாட்டு நிகழ்வுகளை தொடர்ந்து டக்ளஸ் தேவானந்தாவினது பிறந்ததினத்தை முன்னிட்டு கட்சியின் திருமலை மாவட்ட விசேட பிரதிநிதியான புஸ்பராசா அவர்களால் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்களும் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தரமிக்க சேவைக்கு அமைச்சரவை அங்கிகாரம்!
விஷம் கலந்த தேங்காய் எண்ணெய் விவகாரம் - வடக்கின் வர்த்தக நிலையங்கள் - சேமிப்பு கிடங்குகளில் அதிரடிச்...
மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து மற்றும் புகையிரத சேவைகள் இடைநிறுத்தம் - இராஜாங்க அமைச்சர் திலும் அம...
|
|