ஜூன் 7 ஆம் திகதிவரை பயணக் கட்டுப்பாடுகள் நீடிப்பு – இராணுவத் தளபதி அறிவிப்பு!
Monday, May 24th, 2021
இலங்கையில் தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடுகள் ஜூன் 7ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த காலப்பகுதிக்குள் அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக 2 நாட்கள் வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
முன்பதாக கடந்த 21 ஆம் தகதி நாடு முழுவதும் நடமாட்ட கட்டுப்பாடு அமுல்ப்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்துவருகின்றது.
இந்நிலையில் நாளை அதிகாலை 4 மணிக்கு குறித்த பயணத்தடை நீக்கப்பட்டு நாளையதினமே இரவு 11 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடுகள் ஜூன் 7ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
சர்வதேச நாடுகளின் கொரோனா மரணங்கள் பட்டியலில் இலங்கை 13 ஆவது இடத்தில் – எச்சரிக்கையுடன் இருக்குமாறு ப...
இலங்கையில் பொலிஸ் சேவை ஆரம்பிக்கப்படடு இன்றுடன் 155 ஆண்டுகள் பூர்த்தி!
கடந்த ஓராண்டில் மாத்திரம் சுமார் பத்து இலட்சம் மின்சார இணைப்புகள் துண்டிப்பு - காமினி வலேபொட தெரிவிப...
|
|
|


