ஜூன் இறுதிக்குள் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையை நிறைவுசெய்ய முடியும் – மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி நம்பிக்கை!

Monday, April 10th, 2023

எதிர்வரும் ஜூன் மாத இறுதிக்குள் இலங்கை தமது கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்ய முடியும் என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

செப்டம்பரில் ஆரம்பமாகவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் திட்ட மீளாய்வுக்கு, மூன்று மாதங்களுக்கு முன்னதாக இந்த கடன் மறுசீரமைப்பை நிறைவு செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த காலப்பகுதியில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன்கள் எவ்வாறு மறுசீரமைக்கப்படுகிறது என்பது குறித்து ஒரு பரந்த உடன்பாட்டிற்கு வர முடியும்

முன்னதாக உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக, உள்ளுர் வங்கி முறையை சீர்குலைக்கும் எதற்கும் உடன்பட போவதில்லை என மத்திய வங்கி மீண்டும் வலியுறுத்தியிருந்தது.

திறைசேரி சட்டமூலம் மறுசீரமைப்பிற்கு உட்படுத்தப்படும் என்றும் பத்திரங்கள் தன்னார்வ அடிப்படையில் மறுசீரமைக்கப்படும் என்றும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: