ஜுலை மாதத்தின் முதல் 20 நாள்களில் 90 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை – இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!
Saturday, July 22nd, 2023இந்த மாதத்தின் முதல் 20 நாட்களில் சுமார் 90 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில், 15 ஆயிரத்து 330 இந்திய சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகைத்தந்துள்ளனர்.
அத்துடன் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து 10 ஆயிரத்து 184 சுற்றுலாப் பயணிகளும் சீனாவிலிருந்து 5 ஆயிரத்து 963 சுற்றுலாப்பயணிகளும் வருகைத்தந்துள்ளனர்.
ஜேர்மனியிலிருந்து 5 ஆயிரத்து 141 பேரும், ரஷ்யாவிலிருந்து 4 ஆயிரத்து 561 பேரும் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
அமைச்சு பொறுப்புகள் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல்!
ஒன்றரை நாளில் 80 மில்லியன் மக்கள் உயிரிழக்கும் ஆபத்து – எச்சரிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்!
"இளைஞர் நாடகத்தை " சர்வதேச மேடைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் - அமைச்சர் நாமல் ராஜபக்ச உறுத...
|
|
பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ள காலப்பகுதிகளில் பொதுப் போக்குவரத்து இடம்பெறாது - இராஜாங்க அமைச்சர...
நிலவும் நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு இலங்கைக்கு தொடர்ந்து உதவ இந்தியா தயார் - இந்திய வெளிவிவகார...
இந்திய அரசின் 10 ஆயிரம் வீட்டு திட்டத்துக்கான ஒப்பந்தம் இவ்வாரத்துக்குள் கைச்சாத்திடப்படும் - அபிவிர...