ஜி-24 குழுவின் தொழில்நுட்பக் குழுக் கூட்டம் கொழும்பில் இன்று !
Tuesday, February 27th, 2018
ஜி-24 குழுவின் தொழில்நுட்பக் குழுக் கூட்டம் அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (27) ஆரம்பமாகவுள்ளது.
இந்த குழுக் கூட்டம் நாளை யும்(28) நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுமத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளைச் சேர்ந்த நிதியமைச்சின் செயலாளர்கள், மத்திய வங்கி ஆளுநர்கள், சிரேஷ்ட பிரதிநிதிகள் உட்பட 45ற்கும் மேற்பட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜி-77 நாடுகள் குழுமத்தின் மற்றுமொரு கட்டணமான ஜி-24 குழுமம் 1971ம் ஆண்டு உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
செப்ரொம்பர் 3ஆம் திகதி கிராம சேவையாளர் தரம் மூன்றிற்கான போட்டி பரீட்சை!
ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு!
தனிப்பட்ட விஜயமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச இந்தியா பயணம் – நாளை திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமி தரிசனத்தி...
|
|