ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக நாளை வடக்கிற்கு விஜயம் !.
Thursday, May 23rd, 2024
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக நாளை வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
அதன்படி 3 நாள்கள் விஜயமாக வடக்கிற்கு வரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் உரித்து தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் காணி உரிமங்களை வழங்கி வைக்கவுள்ளார்.
அத்தோடு வடக்கில் இளைஞர்களுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பொன்றிலும் கலந்து கொள்ளவுள்ளார்.
இவ்வாறு 10 முக்கிய நிகழ்வுகளில் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளதுடன், வடக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் இவ்விஜயத்தின் போது விசேட அவதானம் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சிவபூமி அறக் கட்டளையின் தலைவரானார் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன்
கடிதங்கள் கிடைக்காதவர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தல்!
பயங்கரவாத தடை சட்டமானது நவீன பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்க போதுமான ஏற்பாடுகளை கொ...
|
|
|


