ஜனாதிபதி பதவியேற்று இன்று 4 வருடங்கள் பூர்த்தி!
Tuesday, January 8th, 2019ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாகப் பதவியேற்று இன்றுடன் 4 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன.
2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறக்கப்பட்ட அவர், இந்த நாட்டின் 06 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவானார்.
இந்நிலையில், இன்று(08) பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
இதன்படி களுகங்கை நீர்நிலை வேலைத்திட்ட நிறைவு நிகழ்வும், மொரகஹாகந்த வேலைத்திட்டத்தின் கீழ் வருகின்ற பழைய லக்கலை நகருக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள லக்கலை புதிய நகரை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வும் இன்று நடைபெறவுள்ளன.
Related posts:
அமரர் கனகரத்தினத்தின் புகழுடலுக்கு கட்சிக்கொடி போர்த்தி ஈழ மக்கள் ஜனநாயக கட்சி இறுதி அஞ்சலி!
பழமரங்களை தறிக்க அனுமதி பெறும் நடைமுறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் - ஜனாதிபதி!
பயனர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரியது பேஸ்புக்!
|
|