கடந்த 24 மணிநேரத்தில் மேலும் ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொவிட் தொற்றுறுதி!
Sunday, July 11th, 2021நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்து 548 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது.
அவர்களில் ஆயிரத்து 515 பேர் புத்தாண்டு கொத்தணியை சேர்ந்தவர்கள் என்றும், எஞ்சிய 33 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவரகள் என்றும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இரண்டு இலட்நத்து 73 ஆயிரத்து 31 ஆக அதிரிகத்துள்ளது
அத்துடன் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கையும் 26 ஆயிரத்து 758 ஆக அதிகரித்துள்ளது.
இதேநேரம் ஆயிரது 804 பேர் நேற்று கொவட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதற்கமைய குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 242,839 ஆக உயர்வடைந்துள்ளது
Related posts:
தபால் சேவைக் கட்டணம் அதிகரிக்கும்!
இரு மாத காலப்பகுதியில் நீரில் மூழ்கி 93 பேர் பலி!
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு உதவ தயார் - சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு!
|
|