ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதில்லை என எந்த இடத்திலும் கூறவில்லை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Tuesday, December 26th, 2023

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதில்லை என தான் எந்த இடத்திலும் கூறவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆளும் கட்சியின் பிரதானிகள் சிலருடனான சந்திப்பில் கூறியுள்ளார்.

கொழும்பில் நத்தார் விடுமுறைக்கு முன்னர் அமைச்சர்கள் சிலருடன் நடந்த பேச்சுவார்த்தையின் பின்னர் கருத்து வெளியிடும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதில்லை என சிலர் கூறும் கதை உண்மையா என அமைச்சர்கள் இதன் போது ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி, “நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் என இதுவரை கூறவில்லை.போட்டியிட போவதில்லை எனவும் கூறவில்லை.

எப்படி இருந்தாலும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப மேலும் வேலைத்திட்டங்களை செய்ய வேண்டியுள்ளது.

கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை நிறைவு செய்ய வேண்டியுள்ளது. புதிய பொருளாதாரத்தை உருவாக்க வேண்டியுள்ளது.இதற்கு காலம் தேவை” என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: