ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடன் சாவகச்சேரி நகரசபையை வெற்றிகொண்டது தமிழ் தேசியக் கூட்டமைப்பு!

Monday, March 26th, 2018

சாவகச்சேரி நகரசபைக்கான தவிசாளர் தெரிவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெரும்பான்மையை நிரூபித்தது ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் யாழ்மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வெற்றிகொண்ட ஊர்காவற்றுறை பிரதேச சபையை தவிர்ந்த ஏனைய சபைகளில் எந்தவொரு கட்சியும் தனித்து ஆட்சியமைக்க தேவையான ஆசனங்களைப் பெறாத நிலையில் காணப்பட்டது.

இந்நிலையில் இன்றையதினம் யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் சாவகச்சேரி நகரசபைக்கான நகரபிதா தெரிவு நடைபெற்றது.

குறித்த தெரிவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் தேசிய முன்னணியும் நகர பிதாவுக்கான முன்மொழிவுகளை மேற்கொண்டிருந்தன. இதன்போது நேரடி வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நேரடி ஆதரவுடன் சாவகச்சேரி நகரசபை தவிசாளராக தமிழரசுக் கட்சியை சேர்ந்த திருமதி சிவமங்கை தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Related posts: