எரிபொருட்களின் விலை அதிகரிப்பு!
Tuesday, September 11th, 2018நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
92 மற்றும் 95 ஒக்டைன் பெற்றோல் வகைகள் தலா 4 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி 92 ஒக்டைன் பெற்றோல் 145 ரூபாவில் இருந்த 149 ரூபாவாகவும், 95 ஒக்டைன் பெற்றோல் 157 ரூபாவில் இருந்து 161 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை டீசலின் விலை 5 ரூபாவினாலும், சூப்பர் டீசலின் விலை 3 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
எனவே, டீசலின் புதிய விலை 123 ரூபாவாகவும், சூப்பர் டீசலின் புதிய விலை 133 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட உள்ளது.
புதிய எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கமைவாக இந்த விலையேற்றம் அமுல்படுத்தப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
கொள்கையில் மாற்றமில்லை - அவுஸ்திரேலியா!
மக்கள் நலனை முன்நிறுத்தாத யாழ் மாநகரின் பாதீட்டை நிராகரித்தது ஈ.பி.டி.பி
வெளிநாட்டுக் கடன் மீள் செலுத்துகை இடைநிறுத்தம் குறித்து சர்வதேச நாணய நிதியம் மதிப்பாய்வு!
|
|