ஜனாதிபதி தென்கொரியா பயணம்!

Monday, November 27th, 2017

எதிர்வரும் 29ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தென்கொரியாவின் ஜனாதிபதி மூன் ஜே இன்னை சந்திக்கவுள்ளார்.

இதன்போது இரு நாட்டு நல்லுறவை வலுப்படுத்தல், வர்த்தகத் தொடர்புகளை விரிவாக்கல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படும்.

இலங்கை – தென்கொரிய ராஜதந்திர உறவுகளுக்கு 40 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு, ஜனாதிபதி தென்கொரியா செல்கிறார். இதன்போது தென்கொரியாவின் வர்த்தக சமுகத்தினர், அங்குள்ள இலங்கையர்கள் உள்ளிட்ட பலரை சந்திக்கவுள்ளார். எதிர்வரும் 30ம் திகதி இந்த விஜயம் நிறைவடையும்.

Related posts: