ஜனாதிபதி தலைமையில் நாளை விசேட சந்திப்பு!

Saturday, July 17th, 2021

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் நாளை சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி மாளிகையில் நாளை மாலை 6 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள அவநம்பிக்கை பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: