ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு டெல்லியில் சிவப்பு கம்பள வரவேற்பு!

Friday, November 29th, 2019

இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருக்கும் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்றைய தினம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார்.

டெல்லியிலுள்ள குடியரசு தலைவர் மாளிகைக்கு வருகை தந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்சவை இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வரவேற்றுள்ளனர்.

இதையடுத்து, நரேந்திர மோடிக்கும் கோட்டாபய ராஜபக்சவிற்கும் இடையிலான கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளதாக தெரியவருகின்றது.

அந்தவகையில், கோட்டாபய ராஜபக்சவிற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கருக்கும் இடையிலான சந்திப்பு இந்திய வெளிவிவகார அமைச்சில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான புரிந்துணர்வுகள் தொடர்பாக இதன்போது கலந்தாலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கோட்டபாய ராஜபக்ச ராஜ் காட் பகுதியிலுள்ள மகாத்மா காந்தியின் நினைவுத்தூபிக்கு சென்று மரியாதை செலுத்தியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முதலவாது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: